சத்தம் கேட்டு சித்தம் செய்ய – Saththam Keattu siththam seiya

Deal Score+1
Deal Score+1

சத்தம் கேட்டு சித்தம் செய்ய – Saththam Keattu siththam seiya

பல்லவி

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

சரணங்கள்

காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ)
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2)

1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் – சத்தம்

2. தேவை அதிகம் ஏராளம் ஆ ஏராளம் ஏராளமே
குஜராத் பீகார் யூபியில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார் – சத்தம்

3. உலக மாமிசப் பிடியினின்றும் ஆ பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு – சத்தம்

4. வெற்றியே தரும் ஆண்டவருக்கு ஆ காணிக்கை காணிக்கையே
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கை காணிக்கையே
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் – சத்தம்

யோவான் 14 :6 – அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
English: John 14:6 – Jesus Answered, “I Am The Way And The Truth And The Life. No One Comes To The Father Except Through Me.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo