
சகோதரர் ஒருமித்து வாசம் – Sagotharar Orumithu Vaasam
சகோதரர் ஒருமித்து வாசம் – Sagotharar Orumithu Vaasam
சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும்
1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும்
அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும்
கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும்
தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன்.
17உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
19பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது.
[சங்கீதம் 119:20)