
துதிப்போம் துதிப்போம் சபையோரே இந்த
பல்லவி
            துதிப்போம் துதிப்போம் சபையோரே – இந்த
கன்வென்ஷன் தந்த இயேசுவையே
அனுபல்லவி
            நம் வாழ்நாளில் இதுவே கொண்டாட்டம் – பூவில்
எங்கும் கிடையாப் பெரும் பாக்கியம் பாடி          – துதி
1.         சுத்தர் பரிசுத்தராவாரே – எங்கும்
சுத்தமாய் நிற்கும் மெய்ப்பொருளே
துயராம் தூதர் பாடிப்போற்ற – அவர்
துதிக்குள்ளே வாசஞ்செய்வதாலே – பாடி          – துதி
2.         புறஜாதியாகவே ஜீவித்தோம் முன்பு
முறையீனமாகக் கெட்டுப்போனோம்
திறமாக இயேசு வந்துதித்து தம்
திரு இரத்தம் சிந்தி உயிர் தந்தார் – பாடி       – துதி
3.         எரிகோவின் கோட்டை விழுந்ததே – இந்த
துதியாகும் ஆயுதமதினால்
ஆகா! போற்றிக் களித்துத் துதிப்போமே – தீய
சாத்தானின் கோட்டைகள் விழவே – பாடி        – துதி
4.         ஆறு இருபதாசாரியர் – துதி
செய்தார் சாலமொன் ஆலயத்தில்
தேவன் மகிமையாய் வந்திறங்கினாரே இன்றும்
மகிமையாய் மத்தியில் வரவே – பாடி                – துதி
5.         முன்னால் நம்மேல் அன்புகூர்ந்து – இந்த
ஆண்டும் கன்வென்ஷனை நல்கினார்
ஆண்டுகள்தோறும் இந்த விதமே – அன்பின்
ஆண்டவர் அருள் செய்யவேண்டியே – பாடி      – துதி
6.         ஏதுமற்ற நரர் நம்மீது – இணை
ஏதுமில்லா மா அன்பு கொண்டே
ஏராளமான ஈவுகளை – தேவன்
தாராளமாய் நல்கினதாலே – பல                       – துதி
7.         இரண்டாம் வருகையும் சமீபம் – பல
ஆண்டாக எச்சரித்தும் வாறார்
ஆண்டாம் இதிலே இயேசு வந்தால் – நாமும்
ஆயத்தமாக இருக்கவே – பாடி                        – துதி

