நிலையில்லா உலகத்தில்

Deal Score0
Deal Score0

பல்லவி

நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா

சரணங்கள்

1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலே
மனம் போன வழிகளில் நடந்தேனையா
மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து
மனதுருகினீரே ஐயா – என் மேல்

2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன்
சிலுவையின் தரிசனம் அளித்தீரையா
இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன்
இனிமேல் என் துணை நீரையா – பூவில்

3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்
உமதாவி என்னிலிருந்து பெலனளித்தீர்
உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எனக்கில்லை
உம்மை நம்பி ஜீவிப்பேனையா – இனி

4. அதி சீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம்
அதிக நித்திய கன மகிமை தரும்
பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்தும்
பதறாமல் பொறுப்பேனையா – இன்னும்

5. உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர்
இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர்
விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தினமுதல்
விசுவாசம் பெருகுதையா – என்னில்

6. இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே
இனிய இயேசையா உந்தன் திருமுகமோ
எனக்குந்தன் அனுபவம் அளித்திட திரும்பவும்
தினம் ஜெபம் செய்கின்றேனையா – தேவா

7. எனது மரணமோ உம் வருகை நாளோ
எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ
கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா
கனிவாய் வேண்டுகின்றேனையா – இப்போ

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo