தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics

Deal Score0
Deal Score0

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார் – 2

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர

சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

நம் கர்த்தர் நல்லவரே-2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம்

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo