கண்மணி போல் என்னை – kanmani pol Ennai
கண்மணி போல் என்னை – kanmani pol Ennai Tamil Christian song lyrics, Written Composed By: Preacher.Gregory Martine – UK
Lyrics
Psalm 17:8 .15 .5 . 7 .9 .14 .1.
பல்லவி
கண்மனிபோல் என்னை காக்கும் யாவே நீரே
உமது நீதியால் தினந்தோறும் உம்மை பார்க்கவே
நாள்தோறும் உமது சாயலில் திருப்தியாகிடவே
வழுவாமல் என் வாழ்வின் நடையும் வழியும் காப்பவரே
அனுபல்லவி
உம்மை நம்புகின்ற அனைவரையம் தப்புவிப்பவர் நீரே
எதிராய் எமும்பும் ஆயுதம் அனுகாமல் காப்பவர் நீரே
உமது வலதுகரத்தினால் தப்பவித்து இரட்சிக்கின்றவர்
உமது அதிசயங்கள் வாழ்வில் விளங்க செய்பவர் நீரே
சரணம் 01
நான் போகும் பாதையில் சிங்கம் பதிவிருக்கையில்
என்னை வளைந்து கொள்கையில் நீரே புகலிடமானீர்
என்னை ஒடுக்கி துயரப்படுத்தும் பகைவர் மத்தியில்
உமது செட்டையின் நிழல் என் வாழ்வின் தாபரமே
சரணம் 02
துஷ்டன் கைக்கும் துக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கும்
என்னை தப்பவித்து தரனியில் தாங்கும் மெசியா நீரே
இம்மையில் தங்கள் பங்கை அடைந்த உலக மனிருக்கும்
எனை வளைந்து கொள்ளும் சங்கிலிகளை தகர்ப்பவரும் நீரே
சரணம் 03
என் கூப்பிடுதல் கேட்பவர் என் யேசுவா நீரே
என் உதட்டின் விண்ணப்பங்களை பிரியமாய் ஏற்க
உமது நீதி நியாயங்களில் எனக்காய் பரிந்து பேசிட
பாத்திரனாய் பரிசுத்தர் முன் என்னை தாழ்த்தி தருகிறேன்
இப்பாடலின் நோக்கம் நம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவே. சங்கீதம் 68:11
ஆண்டவர் வசனம் தந்தார் அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவாசகத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பன்னு . ஏழு நிமிடங்களில் ஒரு செய்தியை மிகவும் இரத்தின சுருக்கமாக விளக்கக் கூடியவர்கள் விளங்கி கொள்ளாதவர்கள் யாவருக்கும் மிகவும் இலகுவான முறையில் புரிய இசையோடு கூட சமர்ப்பனம் செய்து இருக்கின்றோம் . இதில் எங்கள் அன்றாட ஜுவியத்தின் போராட்டங்களில் தேவன் நமக்குள்ளும் பாராட்டின தயவுகளையும் இணைத்துள்ளோம். உங்கள் வாழ்வு ஆசீர்வதிக்கப்படவும். சபைகூடிவருதலை விட்டுவிடாதிருக்கவும் எங்கள் உளமார்ந்த ஆசீர்வாதம் உண்டாவதாக. இது ஒர் இலவச சுவிஷேச வெளியீடு .நகல் உரிமை இல்லை
The purpose of this song is to bring the joy we have received to this world. Psalm 68:11
The Lord has given the word, and the multitude of those who proclaim it is great. Whether the time is oral or not, be careful to preach the Holy Scripture. We have presented a message in seven minutes that can be explained very briefly and easily to those who cannot understand it, along with music. In this, we have included the graces that God has blessed us with in our daily struggles. May your life be blessed. May our spiritual blessings be upon you so that you do not give up the church gathering. This is a free gospel publication. No copyright
Good news threw this song
தாவீதின் சங்கீதம் 17 ம் அதிகாரத்தின் ஊடாக தேவன் நமக்கு கற்றுத் தந்து ஆசீர் வதிக்கும் ஆசீர்வாதங்கள்.
1.ஒரு மனிதனுடைய கண்களை இமைகள் தவறாது காப்பதை விட தேவன் அதிகமதிகமாக
நம் வாழ்வை காப்பாற்றுவார்.
- தேவனுடைய உதட்டின் வாக்கினால் துஷ்டனுடைய பாதைக்கு விலக்கிக் காத்துக்கொள்ளும் வாழ்வை தேவன் ஆசீர்வதித்திருக்கின்றார்.
- தேவனை நம்புகின்றவர்களுக்கு விரோதமாய் எழும்புகின்றவர்களின்னின்று தேவனுடைய வலது கரம் தப்புவித்து இரட்சிக்கின்றது.
- தேவன் தம்முடைய அதிசயமான கிருபை களை அவரை நம்பியிருக்கும் தம்முடையவர்களின் வாழ்க்கையில் விளங்கப்பன்னுவார்
- தேவனுடைய பிள்ளைகளை ஒடுக்கும் துன்மார்க்கருக்கும் பிராண பகைஞருக்கும் யாவே தேவனின் நிழலும் செட்டையும் எப்போதும் காப்பாற்றும்.
5.பீறுகிற சிங்கத்திற்கும் மறைவிடங்களில் பதிவிருக்கும் பாலசிங்கத்திற்கும் மெசியா இயேசுகிறிஸ்து நம்மை பாதுகாப்பார்
6.மனுஷருடைய கைக்கும் இம்மையில் தங்கள் பங்கை தேவனிடத்தில் பெற்ற உலகமக்களின் கைக்கும் எம்மை தப்புவிக்கும் தேவனவர்.
7.இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்தின
குற்றமற்ற இரத்தமும் பழுதற்ற பலியும் சம்பாதித்து தந்த நீதியில் அவருடைய ய முகத்தை தரிசிக்க நம் ஒவ்வொருவருக்கும் மேன்மையான பாக்கியம் கிடைத்திருக்கின்றது. - நாள்தோறும் உறங்கி காலையில் எழுந்திருப்பதும் ,சுவாசிப்பதும் ஜீவனோடு நடமாடுவதும் அவர் சுத்த கிருபை
- நம்முடைய தேவன் எதிர்பார்ப்பத் நாம் எதிலும் எங்கும் திருப்லியடையாமல் அவருடைய சாயலில் திருப்தியடைய வேண்டும் என்பதே
10.அர்ப்பணிப்போம் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம் சுத்த கிருபையை அவர் தருவார்.
Estimated reading time: 3 minutes
Key Takeaways
- The song ‘கண்மணி போல் என்னை – kanmani pol Ennai’ conveys themes of divine protection and guidance.
- It draws inspiration from Psalm 17, emphasizing God’s watchfulness over one’s life.
- The lyrics express a deep reliance on God as a protector against adversaries and life’s struggles.
- The purpose of the song is to share the joy of faith and encourage listeners to gather in worship.
- This is a free gospel publication, meant to communicate blessings and graces received from God.


