Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா

Deal Score0
Deal Score0

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்

அனுபல்லவி

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் – ஆலயம்

சரணங்கள்

1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக
ாட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம்

2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை
யோதிடாதென துள்ளமே இனி – ஆலயம்

3.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந்
தென்றுமன்பதில் ஒன்றவே திரு – ஆலயம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo