ஆண்டவரே இரக்கமாயிரும் – Aandavarae Irakkamayirum
ஆண்டவரே இரக்கமாயிரும் – Aandavarae Irakkamayirum Ash Wednesday Responsorial Psalm lyrics, திருநீற்றுப் புதன் பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில்
நாங்கள் பாவம் செய்தோம்.
திபா 51: 1-2. 3-4a. 4bc-5. 8-9 (பல்லவி: 1a)
பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
1. கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2. என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். – பல்லவி
3. ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4a. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். – பல்லவி
4bc. உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5. இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். – பல்லவி
8. மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
9. என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். – பல்லவி
Aandavarae Irakkamayirum song lyrics in English
ஆண்டவரே இரக்கமாயிரும் பாடல் வரிகள், Aandavarae Irakkamayirum lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the song ‘ஆண்டவரே இரக்கமாயிரும் – Aandavarae Irakkamayirum’ for Ash Wednesday.
- It includes various verses that express repentance and a plea for divine mercy.
- The lyrics emphasize God’s love, mercy, and the desire for purification from sins.
- Additionally, the article provides links to related Tamil Christian songs and resources.


