Podhigai Thamizhil Lyrics – பொதிகைத் தமிழில்
Podhigai Thamizhil Lyrics is a Tamil Christian Worship Song, Written and sung by Dr. M. Raja Climax – பொதிகைத் தமிழில்
பல்லவி
பொதிகைத் தமிழில் புலமை எடுத்தேன் உன்னைப் பாடவே!
எதுகை மோனைக் கலவை தொடுத்தேன் உன்னைப் பாடவே!
அநுபல்லவி
நல்லவனே! எல்லாம் வல்லவனே!
நாக்களும் பாக்களும் புகழ்பவனே!
முள்ளையும் மலராய்க் கொய்பவனே!
முகிலையும் துகிலாய் நெய்பவனே!
இறைவா! தலைவா! என்னிலே வா!
நிறைவாய் அருள் தா……
சரணங்கள்
1) கடலை இரண்டாய்ப் பிளந்தவனே!
கடல்மேல் தடம்வைத்து நடந்தவனே!
கடலையும் காற்றையும் கடிந்தவனே!
கடல்போல் அன்பைப் பொழிந்தவனே! – இறைவா! தலைவா!
2) உடலுக்கு உயிரைக் கொடுத்தவனே!
உடலாய்ப் பிறவி எடுத்தவனே!
உடலைச் சிலுவையில் தைத்தவனே!
உடலை விருந்தாய் வைத்தவனே! – இறைவா! தலைவா!
3) மரத்தின் தொழிலைச் செய்தவனே!
மரத்தை எனக்காய்ச் சுமந்தவனே!
மரத்தின் கனிதந்த தீவினையை
மரத்தில் மடிந்து தீர்த்தவனே!- இறைவா! தலைவா!
4) சொல்லாய் முதலில் இருந்தவனே!
சொல்லால் எல்லாம் படைத்தவனே!
சொல்லால் ஓதும் மறையவனே!
சொல்லில் அடங்கா இறையவனே! – இறைவா! தலைவா!
Podhigai Thamizhil Lyrics In English
Podhigai Thamizhil Song Lyrics, பொதிகைத் தமிழில் பாடல் வரிகள்
Key Takeaways
- Podhigai Thamizhil Lyrics is a Tamil Christian Worship Song written and sung by Dr. M. Raja Climax.
- The song expresses devotion and praises various attributes of God through its verses.
- The lyrics include references to God’s creations, such as the sea and trees, highlighting His power and love.
- Several stanzas depict themes of creation, sacrifice, and divine presence.
Estimated reading time: 2 minutes


