உம் அன்பை – Um Anbai lyrics

Deal Score0
Deal Score0

உம் அன்பை – Um Anbai Karuvilae Umathu kangal Tamil Christian song lyrics, written tune and sung by James Sathish

கருவிலே உமது கண்கள் என்னைக் கண்டதே,
கருசிதையாமல் என்னை பாதுகாத்ததே.
கண்மணிபோல் என்னை சுமந்து வந்ததே,
கருத்தாய் இதுவரை நடத்தி வந்ததே.

உம் அன்பை என்ன சொல்ல
விவரிக்க வார்த்தை இல்லை.(2)

அற்பமாக என்னை பார்த்து நகைத்தவர் முன்,
அன்னாந்து பார்க்கும் படி உயர்த்தி வைத்தீர்; (2)
“இவன் தானா?” என்று சொல்லி பேசும் படி,
காண்போரின் கண்கள் எல்லாம் வியக்கச் செய்தீர். (2)

உம் அன்பை என்ன சொல்ல
விவரிக்க வார்த்தை இல்லை.(2)

நடக்கும் என்ற காரியங்கள் நடுவழியில் நிற்கையில்,
நடந்திடாதா என்று நான் ஏங்கி இருந்தேன். (2)
நினையாத வேளையிலே அற்புதம் செய்தீர்,
நினைப்பதிலும் அதிகமாய் எனக்கு செய்தீர். (2)

உம் அன்பை என்ன சொல்ல
விவரிக்க வார்த்தை இல்லை.(2)

சுமந்து வந்த விதங்களையெல்லாம் எடுத்துச் சொன்னால்,
நன்றி சொல்ல இந்த ஆயுள் போதாதையா! (2)
ஜீவனுள்ள நாட்களெல்லாம் புகழைப் பாடுவேன்,
ஜீவனுள்ள தேவனை நோக்கி என்றும் ஓடுவேன். (2)

உம் அன்பை என்ன சொல்ல?
விவரிக்க வார்த்தை இல்லை.(2)

அளவிட முடியவில்லை, சொல்லிட வார்த்தை இல்லை, விவரிக்கத் தெரியவில்லை, உம் அன்பை என்ன சொல்ல.

விலகாதது, மாறாதது, என்னை விட்டு பிரியாதது.

உம் அன்பை பாடல் வரிகள், Um Anbai lyrics Karuvilae Umathu kangal song

Um Anbai song lyrics in English

Karuvile umadhu kangal ennai kandadhe,
karu sithaiyaamal ennai paadhukaathadhe.
Kanmani pol ennai sumandhu vandhadhe,
karuththaai idhuvarai nadathi vandhadhe.

Um anbai enna solla
Vivarikka vaarthai illai.(2)

Arpamaaga ennai paarthu nagaiththavar mun,
Annandhu paarkkum padi uyarththi vaiththeer; (2)
“Ivan thaanaa?” endru solli pesum padi,
Kaanborin kannellaam viyakka seidheer. (2)

Um anbai enna solla
Vivarikka vaarthai illai.(2)

Nadakkum endra kaariyangal naduvazhiyil nirkaiyil,
nadanthidaadhaa endru naan yengi irundhen. (2)
Ninaiyaadha velaiyile arpudham seidheer,
ninaippadhilum adhigamaai enakku seidheer. (2)

Um anbai enna solla
Vivarikka vaarthai illai.(2)

Sumandhu vandha vidhangalaiyellaam eduththu sonnaal,
nandri solla indha aayul pothaadhaayaa (2)
Jeevanulla naatkalellaam pugazhaip paaduven,
jeevanulla dhevanai nokki endrum oduven. (2)

Um anbai enna solla
Vivarikka vaarthai illai.

Alavida mudiyavillai, sollida vaarthai illai, vivarikka theriyavillai, um anbai enna solla.

Vilagaadhadhu, maaraadhadhu, ennai vittu piriyaadhadhu.

 

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘உம் அன்பை – Um Anbai’ written and performed by James Sathish.
  • It describes the themes of love, gratitude, and the ineffable nature of divine love.
  • The lyrics express feelings of awe and appreciation for God’s unchanging love.
  • The song emphasizes the speaker’s inability to fully articulate their feelings of love and gratitude.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo