Paran Yesaiya Lyrics – பரன் இயேசையா
பரன் இயேசையா
எங்கள் அரண் இயேசையா
கொடும்காற்றில் கலையாமல்
நீர் காத்த இந்த கூடு
உமதன்பின் பசையாலே
கீல் பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும்
Chorus;
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள் அரன் இயேசையா
Stanza-1
மறுநாளை சந்திக்க
பெலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதையா
எதற்க்காக வாழ்கிறோம்
என்றெண்ணி கலங்கி
படுக்கையை கண்ணீரால் நனைத்தோமையா
ராக்காலத்தின் கேள்வியின் மேல்
சூரியனாய் உதித்தீர் ஐயா
Stanza-2
உணவும் உடையும்
இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்கு தந்ததையா
ஏங்கின பொருளும்
உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்கு தந்தீரையா
காட்சியாக வாழ்ந்தோமையா
சாட்சியாய் உள்ளோமையா (இப்போ )



