Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics
உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன்
காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே
இனிய ஏசுவே நான் காண்கின்றேன்
உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவா
உயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவா
உன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன்
உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே
உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை
நல்ல மேய்ப்பன் உந்தன் வழியில் எந்த குறைவும் இல்லை
உன் மந்தை சேர்ந்த ஆட்டை போல என்றும் நான் வாழவே
எந்த தீங்கும் என்னை தொடாமல் என்னை காத்திடுமே