Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே
உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2
பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே-2
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே -2
– ஆராதனை என்றும்
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே-2
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே-2
– ஆராதனை என்றும்
எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே-2
உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே-4
– ஆராதனை என்றும்
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே