வாழுவேன் அன்பர் நாடதில் -Vaazhuvean anbar naadathil

Deal Score0
Deal Score0

வாழுவேன், அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன்
வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார்
வாழுவேன் இன்ப நாடதில்

1. என்ன இம்மேன்மை என் போக்காய்த் தானோ?
என்னென்ன இன்பம் என் சொந்தமானதோ?
ஏற்றுவேன் என் உள்ளமதனால் – துதி
என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் நிதம் – வாழு

2. அன்பின் மகிமை, அன்பே நான் காண
அன்பே, உம் சாயல் என்னில் தரித்தீரே
ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் – துதி
அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே எனில் – வாழு

3. கைவேலையில்லா கனமான வீடே
கைவசமாக்க அருள் என்னிலிருந்தீரே
காதலா, நின் நன்றி கூறுவேன் தினம்
காலா காலங்களாகப் பாடிடுவேன் நான் புகழ் – வாழு

4. நின் கிருபை தேவா என்றென்றுமாக
இவ்வேழை காண இதயந் திறந்தீரே
இன்பமாகப் போற்றிடுவேன் நான் – இனி
இன்னோர் அண்ணலெனக் கெங்குமில்லையே வேறு – வாழு

5. உம் ரூபம் தானே என் பிரியம் தேவே
உம்மோடு சேர என் நெஞ்சு பொங்குதே
உன்னதமான உம்மேன்மை எத்தனை – மகா
ஊற்றுவேன் நிதம் என் உள்ளமதை நான் நிதம் – வாழு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo