நான் மாய்மாலக்காரி – Naan Maaimalakaari
நான் மாய்மாலக்காரி – Naan Maaimalakaari Tamil christian song lyrics, written & Sung by Sis. Saranya Billi Graham from Acts of the holy spirit Ministries
ஆவியானவரே, நான் மாய்மாலக்காரி
கேளும் ஆண்டவரே, நீர் எந்தன் பரிகாரி
நன்மை ஒன்றும் இல்லையே
அவை சிறிதும் என்னில் இல்லையே
வாஞ்சையாய் உள்ளேன் நானும், நிரப்பிட நீர் வாரும்
கனிகளை வாஞ்சிக்கிறேன், மகிமையில் சேர்ந்திட
புளித்த மாவு நானே, புதிதாய் மாற்றும் தேவா
பாவங்கள் நிவர்த்தி செய்யும்படி, நீரே கிருபாதார பலி
உம்மிடம் நான் வந்தேன், நீரே அதற்கு வழி
ஆவியானவரே, நான் மாய்மாலக்காரி
கேளும் ஆண்டவரே, நீர் எந்தன் பரிகாரி
ஸ்தேவான் உம்மை பார்த்தான், கல்லடி படும் போது
மன்னியும் என்றார், உயிர்விடும் போது
மன்னிப்பின் ஊற்றே, பெலன் தாருமே
நீரும் சிலுவையில் என் பாவ சுமைகளை கழுவினீர், மன்னித்தீர், மறந்தீரே
உம்மைப்போல் நானும் மன்னிக்க வேண்டுமே
விதவைப் பெண்ணொருத்தி இரண்டு காசு தந்தாள்
நீரோ பார்த்துவிட்டு அவ்ஏழையை மெச்சிக்கொண்டீர்
நீர் பார்க்கும்படி நான் பார்க்க வேண்டும்
எந்தன் பார்வை ஒளி பெற வேண்டும்
நானும் பார்வை அடைய, என் கண்ணுக்கு கலிக்கம் போடும்
என்ன என் ஆனந்தம் ஆவியானவர் என்னுள் வந்தார்
மாய்மாலக்காரி அல்ல, தம் ஆவியால் நிரப்பி விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் பெற்றேனே,
நீதியின் சால்வையை தந்தாரே,
சூலமத்தி நான் அவர் இருதய முத்திரை
பாக்கியவதி நான் அவர் மகிமையின் சாயல்
மணவாட்டி திருச்சபையாய் வருகையில் சேர்த்திடுவார்
நம்மையும் சேர்த்திடுவார்
நிச்சயம் சேர்த்திடுவார்
நான் மாய்மாலக்காரி song lyrics, Naan Maaimalakaari song lyrics, Tamil songs
Naan Maaimalakaari song lyrics in English
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நான் மாய்மாலக்காரி – Naan Maaimalakaari’.
- The song expresses themes of divine request, grace, and forgiveness in the presence of God.
- It highlights the transformation from sin to salvation through the Holy Spirit.
- The lyrics contain references to seeking guidance and the joy of being filled with the Holy Spirit.
Estimated reading time: 2 minutes


