Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்

Deal Score0
Deal Score0

சீயோன் 1
பொற்பு மிகும் வானுலகும்
பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கே
பொந்திப்பிலாத் தரண்மனையில்
வந்து நிற்கும் காரணமேன், கோவே?

கிறிஸ்து
கற்பனை மீறிய பவத்தால்
கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்
காப்பதற் கிங்கே ஞாய‌
தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு

சீயோன் 2

துய்ய திரு மேனி எல்லாம்
நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌
சோரி சிந்த வாரதினால்
நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு

கிறிஸ்து

வையகத்தின் பாதகத்தால்
பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌
வாதை எல்லாம் பட்டிறக்க‌
போத மனம் சம்மதித்தோம் மாதே – பொற்பு

சீயோன் 3.

செய்ய கண்கள் உறச் சிவந்து
திருக் கன்னங்கள் தடித்து மிக வீங்கி முழுச்
சென்னியின் ரோமங்கள் எல்லாம்
வின்னமுற்றிங் கிருப்பதென்ன கோவே? – பொற்பு

கிறிஸ்து

மையிருளில் குருக்களுடை
மாளிகையில் படித்தின பாடெல்லாம் இங்கே
வன் கொலைஞரால் அடிக்க‌
பங்கமுற்ற கோலம் இது மாதே – பொற்பு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo