Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Deal Score+1
Deal Score+1

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

சிந்திடும் வேர்வைத் துளி
இரத்தமாய் மாறியதோ
தந்தையின் கை விலகும்
நாழிகைதான் இதுவோ
என் இயேசுவே
எனை மீட்கவே
இந்த வேதனையோ

யாவரும் இருந்தும் தனிமையோ
யாரும் கண்டிடா வேதனையோ
யாவரும் இருந்தும் தனிமையோ
யாரும் கண்டிடா வேதனையோ
மறுத்திட இதயமும் தயங்கியதால்
வேண்டுதல் செய்தீரோ
பருகிட முடியா பாத்திரத்தை
நீக்கிட கெஞ்சினீரோ

என்னையும் நினைத்தீரோ
தந்தையின் சித்தத்தை அணைத்தீரோ
என்னையும் நினைத்தீரோ
தந்தையின் சித்தத்தை அணைத்தீரோ
நரகத்தினின்று என்னையும்
காத்திட துடித்தீரோ
கோர சிலுவை சுமந்து செல்ல
பலியாக படைத்தீரோ

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
god medias
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo