Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே
ஏங்குகிறேன் இயேசுவே
என் அருகில் வாருமே
என் சுமையும் போகுமே
உள்ளம் சுகமாகுமே
பாரமுடன் இயேசுவே
உம் முகத்தைப் பார்க்கிறேன்
நல்லவரே இயேசய்யா
என் சுமையும் போக்குமே
பாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்
உம் பார்வையால்
எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்
உம் முகம் காண நேரம்
பாரமெனத் தோன்றுதே
உம் துணை தேடா நேரம்
சோர்ந்து மனம் வாடுதே
தாயைப் போல அணைப்பீர்
கண்ணீர் யாவும் துடைப்பீர்
தாயும் கூட மறந்தால்
என்னை நீரே சுமப்பீர்
பேச வாரும் என் தயாளனே
என்னை தாங்கும் உம் கரத்திலே
மாசில்லாத என் குணாளனே
என்னை ஆளும் மனத்திலே
பாசத்தால் பாவம் போக்கும்
பார்வை உம் பார்வையோ
வார்த்தையால் யாவும் ஆக்கும்
ஆற்றல் உம் ஆற்றலோ
தேவை யாவும் கொடுப்பீர்
உந்தன் நேசம் தருவீர்
நானும் பாதை மறந்தால்
என்னை தேடி வருவீர்
நேசமாகும் உம் நினைவிலே
கண்கள் தேடும் உம் உறவினை
தேற்ற வாரும் என் குமாரனே
என் தேற்றும் உம் வரத்திலே
நேசத்தால் நோயை போக்கும்
காயம் உம் காயமோ
வாழ்வினால் சாவை வெல்லும்
காலம் உம் காலமோ
முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
The glory of this latter house shall be greater than of the former, saith the LORD of hosts: and in this place will I give peace, saith the LORD of hosts.
ஆகாய் : Haggai 2:9
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே