களியல் கலை தோன்றிய வரலாறு – History of Kaliyal Cultural dance

Deal Score0
Deal Score0

களியல் கலை தோன்றிய வரலாறு – History of Kaliyal Cultural dance

நவீன களியல் உலகின் கழியலாசான் திரு ஐசக் டேவிட்சன், அவர்கள் உரை.

தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார்.

பறந்து விரிந்த கடல் போல் உங்கள் அனைவரது குடும்பங்களில் அன்பு பொங்கட்டும், புத்தம் புதிய மலர்களை போல் உங்கள் அனைவரது குடும்பங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
வளம் நிறைந்த ஆறுகளை போல் உங்கள் அனைவரது குடும்பங்களிலும் திறமைகள் பொங்கட்டும்.
இயக்கம் நிறைந்த பூமியை போல் உங்கள் அனைவரது குடும்பங்களிலும் பொறுமை பொங்கட்டும்.
கூடி வாழ்கின்ற பறவைகளை போல் உங்கள் அனைவரது குடும்பங்களிலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைவாய் பொங்கட்டும்.
ஆண்டவனை நினைத்து அனுதினமும் வாழ்ந்திடுங்கள்.
இறைவன் ஒருவன் என்பதை இமயம் வரை உணர்த்திடுங்கள்.
ஈன்றவன் மனம் மகிழ்ந்திடவே ஈகை கொண்டு வாழ்ந்திடுங்கள்.
உண்மை உழைப்பு சத்தியம் உயர்வென உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.
ஊக்கம் பெற்று உழைத்திடுங்கள் ஊர் போற்ற வாழ்ந்திடுங்கள்.
எட்டு திக்கும் புகழ் பரவ எளிய வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.
ஏற்றமுடன் படித்திடுங்கள் சாதனைகள் புரிந்திடுங்கள்.
ஐயம் தந்த வேதத்தையே ஐயமன்றி படித்திடுங்கள்.
ஒற்றுமையே உணர்வென ஒன்று கூடி வாழ்ந்திடுங்கள்.
ஓரறிவாம் பகுத்தறிவை உணர்வில் கொண்டு வாழ்ந்திடுங்கள் என்று வாழ்த்துவது மட்டுமல்ல வருகின்ற புத்தாண்டிலே உங்கள் அனைவரது குடும்பங்களிலும் வெற்றிகள் பதியட்டும், தோல்விகள் தேயட்டும், முயற்சிகள் முழைக்கட்டும், முடியாது என்பது மறை மறையட்டும், முடியும் என்பது வளரட்டும், சாதனைகள் உருவாகட்டும், சரித்திரம் படைக்கட்டும், சோம்பல்கள் விலகட்டும், சமாதானமும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லா நிறைவும் உங்கள் குடும்பங்களிலும் சபையிலும் பொங்கட்டும்.

களியல் கலை தோன்றிய வரலாறு

நம்முடைய முன்னோர்கள் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக பலவிதமான கலை கலை பயிற்சிகளை நமக்கு ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஓடுதல், சாடுதல், விளையாடுதல், நீந்துதல்,பழுதூக்குதல், பரதநாட்டியம்,மாநாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், தீப்பந்தாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், களியலாட்டம்.

இதில் கோலாட்டம் என்று சொல்லுவது பெண்கள் ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டம் என்று அழைக்கப்படுகின்றது.
ஆண்கள் ஆடுகின்ற ஆட்டம் களியல் ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது.

நம்முடைய குமரி மாவட்டத்தில் தூத்துக்குடி சாத்தான்குளம் வட்டார களியலும் கேரளா வட்டார களியலும் கலந்து இருக்கின்றது.

300 ஆண்டுகளுக்கு முன்பாக காலரா என்ற ஒரு கொடிய நோய் நம்முடைய நோய் நம்முடைய தேசம் எங்கும் இருந்ததாகவும் அதன் மூலம் வாந்தி, வயிற்று போக்கு, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல், மரணம் இப்படி சம்பவங்கள் நடந்திருக்கு.

இந்த மரணம் என்று சொல்லும்போது மரித்த ஒருவரை அடக்கம் செய்துவிட்டு வருவதற்குள்ளாக அவர்களை சுமந்து சென்றவர்களும் மரணம் அடைந்து விடுவார்களாம். அதோடு மட்டுமல்ல வீட்டில் இருக்கிறவங்களும் மரணம் அடைந்து விடுவார்களாம் அதனால மக்கள் மரணத்துக்கு பயந்திருந்த காலம் அது அப்பொழுது அந்த காலத்தில் இருந்த மிஷனரிமார்கள் இந்த மக்களின் மரண பயத்தை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தாங்க

நம்ம 2019 கொரோனாவில எப்படி பாதிக்கப்பட்டோம் அந்த சூழ்நிலை ஒரு 300 வருஷங்களுக்கு முன்ன இருந்திருக்கு வீட்டவிட்டு வெளியே போக முடியாது திருமணம் நடத்த முடியாது பள்ளிக்கூடங்கள் இயங்கல போக்குவரத்து இயங்கல ஒரு பணிஸ்தலங்கள இயங்கல வீட்ல மரணம் சேர்ந்திருந்தா மரணம்.
கொரோனாவுக்கு கொடுமை கொடூரமா இருந்தது அதனால் நம்ம பயந்து வேலைகளுக்கு போகாம மாஸ்க் போட்டோம் காய்கறிகள் வீட்டுக்கு வந்து இந்த மாதிரி பலவித இண்ணல்களை பல வருஷங்கள் அனுபவித்தோம்.

300 வருடங்களுக்கு முன்பு அந்த மரணத்துக்கு பயர்ந்திருந்த மக்களை ஆறுதல் படுத்துவதற்காக நம்முடைய மிஷனரிமார்கள் பாதிக்கப்பட்ட வீடு மரணமடைந்த வீடுகள் வழியாக பாடல் பாடி தெருத்தெருவாக சென்று அப்படி சுற்றி வந்திருக்காங்க. அப்படி வந்த பிறகு யாருமே அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கல அப்படி பயந்திருந்தாங்க அதனால் அந்த மிஷனரிமார்கள் என்ன பண்ணாங்கன்னா கையில ரெண்டு சின்ன கம்பு, ஜாலரா, கொட்டு ஹர்மோனியம், பெட்ரோமாக்ஸ் லைட் எல்லாம் கொண்டு வந்து பாடி தன் கம்பில் தட்டியும் தனக்கு ஜோடியினுடைய கம்பில் தட்டியும் தாளம் அடித்து நடனமாடி பாட்டு பாடி உற்சாகமான வாழ்த்து செய்திகளை சொல்லி ஒவ்வொரு தெருத்தெருவாக கடந்து சென்றார்கள் இப்படி பல நாட்கள் கடந்து செய்து வந்த ஊழியத்தின் மூலம் விடுதலை கிடைத்த வாலிபர்களும் இவர்களோடு சேர்ந்து நடனமாடி பாடி வந்தார்கள், இப்படி தெருத்தெருவாக பாடி வருவதை பஜனை பாடல் என்றும் குழு பாடல் என்றும் தெரு பாடல் என்றும் அழைத்தார்கள் இன்னைக்கு பஜனை எதுக்கு வந்ததுன்னு நமக்கு தெரியுது இல்லையா அந்த நேரம் ஏற்பட்ட கால்ராவுல ஒரு சம்பவம்தான் பஜனை இன்னைக்கு ஏராளமான மற்ற மதத்தினரும் அதை கொண்டாடுறாங்க.

இந்த கம்பு தட்டி தாளம் அடித்து வருவதை மக்கள் கம்பாட்டம் என்றும் குச்சி ஆட்டம் என்றும் கோலாட்டம் என்றும் என்றும் களியலாட்டம் என்றும் பாசமாக அழைத்திருக்கிறார்கள்.இதை கற்று கொடுத்தவர்களை ஆசான் என்றும் குரு என்றும் வாத்தியார் என்றும் களியல் அண்ணாவி என்றும் களியல் கோலாட்டக்காரர் என்றும் பாசமாக அழைத்திருக்கிறார்.
பின்னர் நாளடைவில் பல வருடங்களுக்கு பின்பாக இந்த கலை மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு அரசு விழாக்களிலும் சிறப்பு மேடைகளிலும் இந்த விழா நடத்தப்பட்டது. புதிய புதிய ஆசான்மார்கள் இதற்கு வந்து புதிய புதிய நுணுக்க முறைகளை கொடுத்தாங்க. அதனால தொழில் ரீதியான பாடல்கள், குமிடு ரீதியான பாடல்கள், வெற்றி பாடல்கள், கீர்த்தனை பாடல்கள், சமாதான பாடல்கள் அப்படி வந்து பிரமிக்கத்தக்க வகையில் இந்த களியல் வடிவமைக்கப்பட்டது.

பின்னர் பல வருடங்களாக நடைபெற்ற அந்த களியல் அந்த ஆசான்களுக்கு மறைவுக்கு பின்னர் அந்த இடங்கள்ல அந்த களியல் கலையே இல்லாம போயிட்டு, வளர்ச்சி அடைந்த கலை அந்த ஆசான் மறைவுக்கு பின்னர் அல்லது அவங்க சொல்லி கொடுக்க யாரும் முன்வராதனால அந்த கலை அழிஞ்போச்சது. அப்பொழுதுதான் நம்முடைய பிரதம பேராயர் அவர்கள் Rev.தேவ கடாட்சம் அவர்கள் எல்லா சபைகளுக்கும் லெட்டர் அனுப்பினாங்க, ஒவ்வொரு சபையிலும் களியில் தெரிஞ்சவங்க தெரியாதவங்க ஆர்வம் உள்ளவர்கள் அப்பந்த மாவட்டத்தில இருந்து நிறைய பேர் வந்திருந்தாங்க.

நம்முடைய குமரி மாவட்டம் முழுவதும் நல்ல வளர்ச்சி களியில் மூலம் எழுப்புதல் ஏற்பட்டு வருகிறது.

களியில்னால என்ன நன்மைகள்:

உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது, என்றும் இளைஞராக வாழ வழி செய்கிறது, உடலில் ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது சரீரம் முழுவதும் இயக்கப்படுவதால் நல்ல புத்துணர்வு கிடைக்கிறது நல்ல இரத்த ஓட்டம் உருவாகிறது அஜீரணம் வயிற்றுவலி முட்டுவலி தலைவலி கை கால் வலி போன்ற நோய்கள் இதிலிருந்து விடுபடுகின்றன. அதோடு சபையின் குழு அன்பு வாலிபர்கள் மத்தியில் வளர்கிறது, ஒற்றுமை வளர்கிறது சமாதானம் வளர்கிறது தன்னம்பிக்கை வளர்கிறது விட்டு கொடுக்கும் தன்மை வளர்கிறது இப்படி பல பலவிதமான நன்மைகள் இருக்கிறது மொத்தத்தில தேவ நாமம் மகிமைப்படுகிறது.இந்த தேவ நாமம் மகிமைப்படும்படியான களியில் கலை கற்று நீங்களும் ஆரோக்கியமாக வாழுங்கள்.
கர்த்தர் உங்களுக்கு அருள் புரிவாராக.ஆமென்

நன்றி அன்பு அண்ணன் ஐசக் டேவிட்சன்.

களியல், kaliyal

 

Key Takeaways

  • The article discusses the history of Kaliyal cultural dance, emphasizing its roots and significance in the community.
  • Kaliyal dance includes various traditional forms, evolving from a mix of various folk dances over centuries.
  • The text highlights how the dance played a role in community bonding and spiritual upliftment, especially during times of crisis.
  • It recounts the efforts of missionaries to comfort people during a historical pandemic and how these actions laid the foundation for popularizing Kaliyal dance.
  • The benefits of practicing Kaliyal dance include physical health, unity among youth, and the promotion of community values.

Estimated reading time: 4 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tags:

Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo