
Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம்
Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம்
சரணங்கள்
1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?
உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே.
2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே
மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே.
3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ?
பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே.
4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது
நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.-
5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்
கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன.
6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும்
பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா.
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
And Aram begat Aminadab; and Aminadab begat Naasson; and Naasson begat Salmon;
மத்தேயு : Matthew:1:4