வட்டநிலா பொட்டழகே – Vattanilla Pottalagae
வட்டநிலா பொட்டழகே – Vattanilla Pottalagae Tamil Christian song lyrics, written tune and sung by Fr. Paula jayakumar & Lavanya
வட்டநிலா பொட்டழகே
வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே
நல்லதமிழ் பாட்டழகே
மொத்தத்துல பேரழகே – உன்ன
முத்தமிட்டு கொஞ்சனுமே
சித்தமெல்லாம் ஓ நெனப்பு
சித்திரமா நிக்கிதய்யா
ரெத்தமெல்லாம் ஓன் பாசம்
ரெக்ககட்டி ஓடுதய்யா
சின்ன ஓ விரலு பட்டா
சிறகுரெண்டு மொளக்காதா
வண்ண ஓ முகத்த பாத்தா
வாழ்க்க கொஞ்சம் மாறாதோ
வட்டநிலா பொட்டழகே
வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே
நல்லதமிழ் பாட்டழகே
அரண்மனையில் தொட்டி கட்டி
அரசனெல்லாம் காத்திருக்க
தெருவோர குடிசையில
தெய்வமா பொறந்திருக்க
ஒசத்தியா நீ வருவன்னு
ஊருசனம் பாத்திருக்க
ஓரமா கெடந்தோர
ஒறவாக்க பொறந்திருக்க
பஞ்சுமெத்தை புடிக்கலயா
பாசமட்டும் தேடுறியே
கந்தயிலே சிரிக்குறியே
காசுபணம் வேணாமா
அங்கெல்லாம் நீ பொறந்தா
அத்தனையும் கூடவரும்
இங்க வந்து நீ பொறக்க
என்னத்தான் நாங்க செஞ்சோம்
என்னதவம் நாங்க செஞ்சோம்
வட்டநிலா பொட்டழகே
வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே
நல்லதமிழ் பாட்டழகே
கல்லுல வீடுகட்டுனா
கடனாகி போகுமுன்னு
நெஞ்சில செலவடிச்சு – ஒன்ன
நெசமா வெச்சிருக்கேன்
மண்ணுல வீடுகட்டுனா
மடிவீணா போகுமுன்னு
மனசுல கோயிலகட்டி
மகராசா வச்சிருக்கேன்
மச்சுவீட்டு மெத்தயில
மல்லிப்பூ குத்திடுச்சோ – ஏ
நெஞ்சிகுழி பள்ளத்துல
நித்தமும் தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
குருவிக்கும் கூடிருக்கு – நீ
குப்பையில் ஏ பொறந்த – அந்த
சிலுவைக்கி ஆசபட்டா – நீ
சிசுவா பொறந்த..?
துன்பங்கள தாங்கணுமே
துரோகங்கள பாக்கணுமே
அவமான சின்னத்தயே நீ
அடையாள மாக்கனுமே
நெருஞ்சியில நடக்கணுமே
நீண்ட தூரம் போகனுமே
கருஞ்சிவப்பு ரத்தம்சிந்தி
கல்வாரி ஏறனுமே – 2
கன்னிமரி பெத்தெடுத்த
கருண மகராசா – அதுக்கு
இன்னும் கொஞ்ச நாளிருக்கு
இப்போது நீ தூங்கு
ஏ யேசுராசா நீ தூங்கு
மகராசா நீ தூங்கு
ஏ ராசா நீ தூங்கு
ஆரிரரோ ஆரிரரோ
Vattanilla Pottalagae song lyrics in English
வட்டநிலா பொட்டழகே lyrics, Vattanila lyrics, Tamil catholic Christmas songs
நிராகரிக்கப்படும் நேரங்களிலும்
அவமானப்படுத்தப்படும் தருணங்களிலும்
அவரையே அன்புசெய்ய வேண்டுமென்று
பிரியப்படுகிறீர்கள் என்றால்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
காரணம், அப்பொழுதெல்லாம்
நீங்களும் கடவுளாகி கொண்டிருக்கிறீர்கள்.
-பவுலா ஜெயக்குமார்
கருவறைகளில் இறந்துபோன
ஏதுமறியாத குழந்தைகளுக்கு சமர்ப்பணம்,
அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் – லூக் 2 : 51
Key Takeaways
- வட்டநிலா பொட்டழகே – Vattanilla Pottalagae is a Tamil Christian song written and sung by Fr. Paula Jayakumar and Lavanya.
- The lyrics celebrate beauty and spirituality, connecting human experiences with divine love.
- The song aligns with themes of devotion and the significance of faith in challenging times.
- The article includes an English translation of the song and a dedication to children who have passed away.
- It emphasizes loving God through both joyous and difficult moments, highlighting blessings in one’s spiritual journey.
Estimated reading time: 2 minutes


